இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியின் தெரிவுக்கூட்டம் இன்று (29.03.2026) கட்சியின் வவுனியா மாவட்டத்தின் உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது புதிய நிர்வாகத்தின் தலைவராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்களும், செயலாளராக வெங்கலச் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் யோகேஸ்வரன் சனோஜன் அவர்களும் பொருளாளராக மருத்துவர் ஞானசிங்கம் நிரோசன் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், உபதலைவர், உபசெயலாளர் உள்ளிட்ட நிர்வாகசபை உறுப்பினர்களும் இதன் போது தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த தெரிவுக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டக் கிளையின் செயலாளர் நடராசா கருணாநிதி, பொருளாளர் சி.சந்திரசேகரம், மாவட்டக் கிளை உறுப்பினர் மயூரதன், பாபு ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


Recent Comments