யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன் மற்றுமொரு காவல் உத்தியோகஸ்தருக்குப் படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கொடிகாமம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர்.
இந்தநிலையில், காவல்துறையினரைக் கண்டதும் உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து, காவல்துறையினர் இருவர் மீதும் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது உழவு இயந்திரம் மோதியதில், கொடிகாமம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


Recent Comments