முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் 18.05.2026இன்று முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் 17ஆம் ஆண்டு பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதுடன், தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சரியாக காலை 10.30மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அந்தவகையில் இறுதிப் போரின் போது உறவுகளை இழந்த முல்லைத்தீவு – வற்றாப்பளையைச் சேர்ந்த சிறீரஞ்சன் ரினோசா என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அத்தோடு ஏனையவர்களாலும் சமநேரத்தில் சுடரேற்றப்பட்டது.
அதனையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உறவுகளை இழந்த உறவுகள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
மேலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நாளின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், மதத் தலைவர்களும், பெருந்திரளான பொது மக்களும் பங்கேற்று தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Recent Comments