இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் ஊடாக இடம்பெறும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TELEGRAM, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் மற்றும் பல்வேறு இணையத்தளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவான முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நிதிமோசடிகளில் ஈடுபடுவோரை கைது செய்யும் வகையில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மாஅதிபரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மோசடிகள் தொடர்பில் கணிணி குற்ற விசாரணை பிரிவின் 011 2300 756 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியுமென பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 071 859 2918 அல்லது 071 859 1765 எனும் இலக்கங்களுக்கும் அழைக்க முடியுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தவிர குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளை சமர்பிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Recent Comments