இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளில், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘ரடம எகட’ (நாடொன்றாக இணைந்து) தேசிய நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர், கடந்த 2024 ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்களும், 2025 ஆம் ஆண்டில் 2 சம்பவங்களில் 26 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் கைது நடவடிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.


Recent Comments