Saturday, August 15, 2026
Huisதாயகம்செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 8 எலும்புக் கூடுகள் அடையாளம்..!

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 8 எலும்புக் கூடுகள் அடையாளம்..!

செம்மணி புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 53ஆவது நாளான இன்று 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி, இதுவரை 107 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 562 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 557 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!