Wednesday, February 5, 2025
Huisதாயகம்யாழில் துயரம்; திடீரென மயங்கி வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

யாழில் துயரம்; திடீரென மயங்கி வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

யாழில் திடீரென மயங்கிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

குறித்த துயர சம்பவம் யாழ். கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஊரெழு கிழக்கு பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த கிருபரஞ்சன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை தனியார் கல்வியில் நிலையத்துக்கு மகளை ஏற்றுவதற்காக மோட்டார் சைக்கிள் எடுக்கச் சென்றவர் திடீரென ஓடி வந்து மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக யாழ். போதனா வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் நேற்று செவ்வாய்க் கிழமை யாழ். போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!