Wednesday, June 25, 2025
Huisதாயகம்அதி திறன் மோட்டார் சைக்கிள்களை வீதிகளில் பயன்படுத்த முடியாது..!

அதி திறன் மோட்டார் சைக்கிள்களை வீதிகளில் பயன்படுத்த முடியாது..!

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான விதிமுறைகளை சிறிலங்கா காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வர்த்தமானிகளை மேற்கோள்காட்டி இந்த தெளிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அதிகபட்சமாக 450 சிசி எஞ்சின் கொள்ளளவுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், ஏப்ரல் 11, 2013 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில், விளையாட்டு மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக மாத்திரம் 450 சிசி முதல் 1001 சிசி வரையிலான எஞ்சின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய பாதுகாப்பு அமைச்ச மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சிறப்பு ஒப்புதல் தேவை என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஒப்புதல் செயல்பாட்டின் போது, ​​விண்ணப்பதாரர் மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி மோட்டார் சைக்கிளைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில், மோட்டார் சைக்கிளைப் பதிவு செய்யும் போது, ​​மோட்டார் சைக்கிள்களை பொது வீதிகளில் பயன்படுத்த முடியாது, ஆனால் பந்தயப் பாதைகளுக்கு மட்டுமே என்று ஒரு நிபந்தனை அதன் பதிவுப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று காவல்துறை மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!