வடக்கு ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு; அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம்..!

ஆளுநராக சாள்ஸ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது ”லஞ்ச ஊழலை வளர்க்காதே, ஊழல்வாதிகளை காப்பாற்றாதே, தமிழினத்தை அழிக்காதே, தமிழ் கலாசாரத்தை சிதைக்காதே, ஆளுநர் அலுவலகத்தை விட்டு வெளியேறு” போன்ற கோசங்களுடன் போராட்டம் இடம் பெற்றுள்ளது.



இதேவேளை வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்கள் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.



வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் கடந்த புதன்கிழமை (17.05.2023) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.