பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை துஸ்பிரயோகம் செய்ய முயற்சி; இளைஞன் கைது..!

அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து வன்புணர்வு செய்ய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இதனை அக்கரைப்பற்று காவல்துறை நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.



சனிக்கிழமை (27) மாலை பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பிகொண்டிருந்த மாணவியிடமே குறித்த நபர் பாலியல் சேட்டை புரிய முயன்றுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவி அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், மாணவியின் பெற்றோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



இதேவேளை அக்கரைப்பற்று காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட காவல்துறை குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் பெண் மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு சில மாணவிகள் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



குறித்த பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து காவல்துறையினர் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.