மொட்டின் தலைமைப் பதவியிலிருந்து விலகும் மகிந்த?

நாட்டில் தற்போது பல அரசியல் மாற்றம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மீரிகம விகாரையில் விகாராதிபதியை சந்திப்பதற்காக வந்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.



கட்சிக்குள் எப்போதும் ஒரே மாதிரியான தலைமைத்துவங்கள் இருக்க கூடாது எனவும் தலைமைத்துவம் என்பது மாற்றமடைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மகிந்தவிடம் ஊடகவியலாளர் வினவிய போது,



சமூக வலைத்தளம் என்பது நல்லதை கொண்டுள்ளது கெட்டதையும் கொண்டுள்ளது. கட்டுப்படுத்துவதால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.