பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப காலம் நாளையுடன் நிறைவு..!

2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்ப வழங்கப்பட்ட கால அவகாசம் நாளைய தினத்துடன் முடிவடைகிறது.



விண்ணப்பங்களை இணையத்தளத்தில் அனுப்பி வைக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.



2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.