புலமைப் பரிசில் பரீட்சையில் பாவற்குளம் கணேசுவரா மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை..!

வவுனியா பாவற்குளம் கணேசுவரா மகாவித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 22 மாணவர்களில் விசேட தேவைச் சித்தி உள்ளடங்கலாக 7 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வெங்கலச் செட்டிகுள கோட்டத்தில் வரலாற்றுச் சாதனையினைப் புரிந்துள்ளனர்.



அந்த வகையில் விஜயசீலன் கேதுசன்-168, சிறீகரன் அஹனிகா-166, தமிழ்வேந்தன் கிருந்தினி-160, விஜேஸ்வரன் கம்சினி-154, ரகுநாதன் லக்ஷயன்-146, கோமலேசன் வினுயன்-146, கபில்ராஜ் அனுசாந்-52 புள்ளிகளையும், பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கும், கிராமத்திற்கும் புகழைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.




பாடசாலையின் அதிபர் திரு.கா.பிரசன்னா,வகுப்பாசிரியை மற்றும் மாணவர்கள் சிறந்த அடைவுகளைப்பெற அர்ப்பணித்த அனைவரையும் சமூகத்தினர் நன்றி பாராட்டியுள்ளனர்.



தோற்றியோர் 22
வெட்டுப் புள்ளிக்கு மேல்.06
விசேட தேவை சித்தி.01
100 இற்கு மேல்.06
70 இற்கு மேல் 06
70 இற்கு கீழ் 03
சித்தி வீதம் 86.36%
உயர் புள்ளி. 168