முள்ளியவளையில் போதைப் பொருட்கள் மீட்பு; சந்தேக நபர்களைக் கைது செய்ய தேடுதல்கள் ஆரம்பம்..!

முல்லைத்தீவு – முள்ளியவளை கணுக்கேணியில் போதைப்பொருள் தொடர்பாக நேற்று இரவு 9 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தேக நபர்கள் போதைப் பொருட்களை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்கள்.



குறித்த இடத்திலிருந்து சிறு சிறு பொதி செய்யப்பட்ட வகையில் 4 கட்டு ஹெரோயினுடன் (10 மில்லி கிராம்), 4 கிராம் குடு போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.



கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருட்கள் முள்ளியவளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.