க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியாக 13,588 மாணவர்களுக்கு 9A..!

க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியிருந்த நிலையில் 13,588 மாணவர்கள் 9 A சாதனை படைந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் நாடளாவியரீதியில் , 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.



இவர்களில் 13,588 மாணவர்கள் 9 பாடங்களுக்கும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள மஹாமாய பெண்கள் பாடசாலை மாணவியொருவர், நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை, இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவர் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர் ஒருவர் பெற்றுள்ளார்.