2600 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க தீர்மானம்..!

நாடளாவிய ரீதியாக புதிதாக 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.



இதற்கான பரீட்சை நேற்றைய தினம்(02) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்டது.



அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.