கில்மிஷாவை நேரில் சென்று வாழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்..!

கில்மிஷாவை இன்றையதினம் நேரில் சென்று சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அவரை வாழ்த்துகளை தெரிவித்தார்.



தன் இசையால் உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத் தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்ச்சியில் வெற்றியாளராக முடிசூடி நாடு திரும்பிய கில்மிஷாவை, அரியாலையில் உள்ள வீட்டிற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று வாழ்த்தி மதிப்பளித்தார்.



இதன்போது கில்மிஷாவின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.