ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் எடுத்துள்ள அதிரடி முடிவு..!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளை உள்வாங்கும் முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதன்படி, இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும், ஜனவரி மாதம் சிறு கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் நேரில் பேச்சு நடத்தவுள்ளார் என்று தெரிய வருகின்றது.



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு வழங்குமாறும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் ரணில் தெரிவித்துள்ளார்.



இருப்பினும், ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்காது, தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான ஏற்பாடுகளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செய்து வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே மொட்டுக் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளை வளைத்துப் போடுவதற்கான வியூகத்தை ஜனாதிபதி அமைத்துள்ளார்.



மேலும், மலையகத்தில் உள்ள சிறு கட்சிகளுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தவுள்ளார்.