ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக போராட்டம் செய்தவருக்கு விளக்கமறியல்..!

வவுனியா காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.



இதனையடுத்து வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டநிலையில் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.



கைது செய்யப்பட்டவர்கள் நேற்று(05) மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன் போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் திங்கட் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார்.