இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு ஏற்கனவே திட்டமிட்ட தினங்களில் இடம்பெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கடந்த ஆண்டு ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி நடைபெற்றது.



இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27, 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெறும்.



கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் தலைமையில் மு.ப. 10 மணியிலிருந்து இந்த மாநாடு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.