முல்லைத்தீவில் யாழ் பல்கலை மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்..!

முல்லைத்தீவில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்களை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த இளைஞன் ஒருவர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்றையதினம் காலையில் இடம் பெற்றுள்ளது.

யாழ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் சிலர், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள தமது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.



பின்னர், தோழியின் உறவினர் வீடு அமைந்துள்ள முத்தையன் கட்டுக்கு சென்றனர். அங்கு நீரோடும் வாய்க்காலில் மாணவிகள் குளித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மாணவிகளுடன் ஆபாசமாக பேசியுள்ளனர்.

சிறிது தூரம் சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரும், மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளனர்.



அந்த பகுதியில் சுற்றி வட்டமடித்து தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளனர்.

இதன்போது, மாணவியொருவர் குளிப்பதற்காக கொண்டு வந்த அலுமினிய வாளியை இளைஞர்கள் மீது வீசியுள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவரின் தலையில் வாளி பட்டு, இருவரும் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளனர்.

மாணவிகள் சத்தமிட்டபடி வீதிக்கு ஓடிவர, மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் எழுந்து மோட்டார் சைக்கிளை ஆன் செய்து கொண்டு ஓடிவிடியுள்ளனர்.



பின்னால் இருந்து வீடியோ எடுத்தவரை மாணவிகள் பிடித்துக் கொள்ள, இந்த களேபரத்தை அவதானித்த பிரதேச இளைஞர்கள் சிலர் வந்து அந்த இளைஞனை நையப்புடைத்தனர்.

அவரது கையடக்க தொலைபேசியில் மாணவிகள் குளித்த வீடியோ காணப்பட்டது. அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டது.

பின்னர் இளைஞனின் மேலாடைகளை கழற்றி விட்டு, நீரோடும் வாய்க்காலுக்கும் வீசப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.

மாணவிகளும் அவரை சரமாரியாக தாக்கியத்தோடு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.