15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு; வவுனியா தேக்கவத்த விடுதி முகாமையாளர் கைது..!

15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று புதன்கிழமை (15) தெரிவித்தனர்.

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கக்கின்றனர். அங்கு சிறுமிக்கு இளைஞர் போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.



அதற்கு உடந்தையாக செயற்பட்ட 20 வயதான பெண், 20 வயதான நகரில் உள்ள தொலைபேசி நிலையத்தில் கடமையாற்றிய நபர் உட்பட 4 பேர் அண்மையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா பொலிஸார் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.



சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.