யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி பலி..!

யாழ். அச்சுவேலி பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி புத்தூர் கணம்புலியடி சந்தியில் இன்று(20.05.2024) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்தில், திவாகரன் – சரோஜா என்ற 23 வயதுடைய இளம் யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

புத்தூர் கணம்புலியடி சந்தியில் விபத்து இடம்பெற்று, வைத்திய சாலைக்கு கொண்டு வரும் வழியில் யுவதி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



இந்நிலையில் உயிரிழந்த யுவதியின் சடலம் தற்போது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *