யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்: வெளியாகிய அறிவிப்பு..!

யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்க இவர்களுக்கான ஆசிரிய நியமனத்தை வழங்கவுள்ளார்.



இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் – தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.



இந்நிலையில், நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *