வட மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கணக்காளாரின் திருகுதாளம் அம்பலம்..!

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்ற்பட்ட சம்பத்நுவர பாடசாலை அபிவிருத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் கால இழுத்தடிப்பு செய்யப்பட்டமை வெளிவந்துள்ளது.

குறித்த பாடசாலையின் அபிவிருத்திக்காக சுமார் 485 740.57 பெறுமதியான நிதியினை விடுவிக்குமாறு மாகாண கல்வி பணிப்பாளரினால் கடந்த வருடம் ஐப்பசி மாதம் கடிதம் அனுப்பப்பட்டது.



எனினும் முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளரான தமிழ் மாறன் மற்றும் கணக்காளரான திவ்யரூபன் ஆகியோர் குறித்த பாடசாலைக்கான நிதியை வழங்காது காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.



குறித்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்டர்ஸ் முல்லைத்தீவு வலயக் கல்வி பணிப்பாளரிடம் குறித்த நிதி வழங்கமை தொடர்பில் விளக்கம் கேட்டு எழுதும் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.



முல்லைத்தீவு வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கணக்காளர் மட்டுமன்றி வடக்கில் பல வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் ஆதாரங்களுடன் பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ள போதும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவற்றைக் கண்டு கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *