வவுனியாவில் 24 வயது இளம் பெண்ணொருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்றைய தினம் (04-06-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்வி தலைமையிலான பொலிஸார் வவுனியா, தோணிக்கல் பகுதியில் விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையின் போது விற்பனைக்காக தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர்.
இதன் போது குறித்த ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.