Monday, September 7, 2026
Huisஉலகம்ஈரான் எம்மைத் தாக்கினால், அது கற்பனை செய்து பார்க்க முடியாத இழப்பை சந்திக்கும் - பெஞ்சமின்...

ஈரான் எம்மைத் தாக்கினால், அது கற்பனை செய்து பார்க்க முடியாத இழப்பை சந்திக்கும் – பெஞ்சமின் நெதன்யாகு

“நாம் ரோஷ் ஹாஷானா புத்தாண்டு பிறப்பின் வாயிலில் நிற்கிறோம். எப்போதும் இல்லாத வகையில், இஸ்ரேல் நாடு மட்டுமே முதன்மையானதாக உள்ளது. இந்த மேசையைச் சுற்றி நாம் இணைந்து எடுத்த விவேகமான மற்றும் தைரியமான முடிவுகளுக்கு எனது நன்றிகள் எனத் தெரிவித்த பிரதமர்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நமது வீரர்களின் வீரம் மற்றும் எமது மக்களின் மன உறுதிக்கு நன்றிகள், நாம் மகத்தான சாதனைகளை அடைந்துள்ளோம். இஸ்ரேல் எப்போதையும் விட மிகப் பலமாக உள்ளது, நமது எதிரிகள் எப்போதையும் விட மிகவும் பலவீனமாக உள்ளனர்.

நாம் அமெரிக்காவுடன் இணைந்து, நமது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த அச்சுறுத்தலை (existential threat) அகற்றுவதில் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளோம்.

எதிரிகளின் அணு குண்டுகளையும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் நாம் தூக்கி எறிந்துள்ளோம், மேலும் ஈரானிய அச்சின் மீது பிரம்மாண்டமான பலத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளோம்.

நம்மை நாமே தற்காத்துக் கொள்ள நாம் உறுதியாக இருக்கிறோம், நமது எதிரிகளைத் தாக்க நாம் உறுதியாக இருக்கிறோம். அவர்கள் தற்போது நம்மைத் தாக்கவில்லை.

ஈரான் அப்படிச் செய்வதிலிருந்து விலகி நிற்கிறது, அதற்கு என்ன காரணம் என்றும் அவர்களுக்குத் தெரியும். நிச்சயமாக, அவர்கள் தவறாகக் கணித்து நம்மைத் தாக்கும் தவறைச் செய்யக் கூடும். அவ்வாறு செய்தால், கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிலான அடியை அது சந்திக்கும்.

நமது எதிரிகளுக்கு நான் கூறுகிறேன்: நம்மைச் சோதித்துப் பார்க்காதீர்கள். சோதனை நேரங்களில் எவ்வாறு ஒன்றிணைய வேண்டும் என்பது இந்த மக்களுக்குத் தெரியும். இந்த நொடியில் மத்திய கிழக்கிலும், சிலர் சொல்வது போல் அதற்கு அப்பாலும் இதுவே மிக வலிமையான வல்லரசாகும்.

இங்கிருந்து, இடை விடாது உழைக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் வீரமிக்க வீரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். லெபனான், காசா மற்றும் ஜூடியா மற்றும் சமாரியாவில் (மேற்கு கரை) நாம் இரவு பகலாக பயங்கரவாதிகளை அழித்து வருகிறோம்.

அவர்களின் சாதனைகள் மகத்தானவை, ஆனால் இன்னும் பூர்த்தி செய்ய வேண்டியவை மீதம் உள்ளன. முதலாவதாகவும் முதன்மையாகவும், ஆட்சியைக் கவிழ்ப்பதையே நான் குறிப்பிடுகிறேன்.

ஈரானில் உள்ள இந்த ஆட்சி – இதன் முடிவு மிகவும் அருகில் உள்ளது. அது பலவீனமாக உள்ளது, தன் உயிருக்காகப் போராடுகிறது, தள்ளாடுகிறது.

மேலும், நாம் கொண்டுவர உறுதியளித்துள்ள மற்றொரு பணியும் உள்ளது. இது மத்திய கிழக்கின் முகத்தையும் நமது மக்களின் வரலாற்றையும் நிரந்தரமாக மாற்றும். இதைச் செய்ய நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதையும், இதைச் செய்ய நம்மால் முடியும் என்பதையும் நாம் அறிவோம்.

எனவே, இந்த ஆண்டும் அனைத்து சாபங்களும் முடிவடையட்டும், நாம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஆசீர்வாதங்களைக் கொண்ட ஒரு புதிய ஆண்டு தொடங்கட்டும் என நான் கூறுகிறேன், இஸ்ரேலிய மக்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.”

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!