அரச ஊழியர்களுக்கு மற்றுமொரு சுற்றறிக்கை – வஜிர அபேவர்தன

அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் பணத்தின் ஒரு பகுதி அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழங்குவதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.