மானியங்கள் ஆணைக்குழு உட்பட 420 அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்..!

நாட்டில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி, 420 அரச நிறுவனங்களை கோப் குழு முன் அழைக்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.



கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, ஆண்டுத்தோறும் அரச நிறுவனங்களை கோப் குழுவின் முன் அழைக்க வேண்டும் என்ற போதிலும், அது சரியான முறையில் செய்யப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் 04 அரச நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளன.



இதற்கமைய இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை விமான சேவை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பன கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவை இவ்வருடம் கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மீண்டும் அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.