சாதாரண தர பரீட்சை எப்போது ஆரம்பம்; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு..!

2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை 2023 மே 29 ஆம் திகதி முதல் ஜூன் 08ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மே 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.