பாடசாலைகளுக்கு எப்போது விடுமுறை ? வெளியாகிய கல்வி அமைச்சின் அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிர்வரும் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



அதன்படி மே 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை காரணமாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.