யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியதை அடுத்து, காவல்துறை சார்ஜண்ட் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கடந்த25ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுகவீனமடைந்த நிலையில், காவல்துறை பாதுகாப்புடன், யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார்.
அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்து , நீதிமன்றினால் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , சம்பவம் தொடர்பில் காவல்துறையினரின் உள்ளக விசாரணைகளை அடுத்து , சந்தேகநபர் தப்பி சென்ற நிலையில் , அன்றைய தினம் சந்தேக நபரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை சார்ஜண்ட் தர உத்தியோகத்ததர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Recent Comments