Saturday, January 24, 2026
Huisதாயகம்யாழில் 17 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்..!

யாழில் 17 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்..!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து 24ஆம் திகதி திங்கட்கிழமை உயிர் மாய்த்துள்ளார்.

மூளாய் – ஆலடி பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கீர்த்திகா (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த சிறுமி திங்கட்கிழமை (24) காலை சுருக்கிட்டுள்ளார். இதை அவதானித்த தாயார் கயிற்றினை அறுத்துள்ளார். பின்னர் அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது.

அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்து திரும்பி சென்றது.சிறுமியின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!