Saturday, January 24, 2026
Huisதாயகம்நாமலின் நுகேகொட பேரணி மேடையில் கைத்துப்பாக்கியுடன் முன்னாள் எம்.பி..!

நாமலின் நுகேகொட பேரணி மேடையில் கைத்துப்பாக்கியுடன் முன்னாள் எம்.பி..!

நுகேகொடையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்கு பண்டார கைத்துப்பாக்கியுடன் மேடையில் நின்றமை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குறித்து விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்படி கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. உரையாற்றும் போது அருகில் கழுத்துப் பை ஒன்றை தாங்கியபடி கைத்துப்பாக்கி ஒன்றைச் சுடுவதற்குத் தயார் நிலையில் வைத்திருக்கும் பாணியில் உதித் லொக்கு பண்டார நின்று கொண்டிருந்தமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தற்போது சுதந்திரக்கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் உதித் லொக்கு பண்டார அப்படி இருந்தது ஏன்? அவர் நாமல் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கினாரா?

அல்லது தற்பாதுகாப்புக்காக அப்படிச் செயற்பட்டாரா என்ற கோணங்களில் நோக்கப்படுவதால் விசாரணைகளை நடத்த தீர்மானித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிக்கையொன்றை நுகேகொடை பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரிடம் கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உதித் லொக்குபண்டார மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் வாக்குமூலம் பெறவும் காவல்துறை தயாராகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!