Wednesday, December 3, 2025
Huisதாயகம்வானிலை தொடர்பான போலித் தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் டிஜிட்டல் அமைச்சு..!

வானிலை தொடர்பான போலித் தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் டிஜிட்டல் அமைச்சு..!

நாடு தற்போது எதிர்கொண்டு வரும் மோசமான வானிலை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை கண்டறிந்து அகற்றுவதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், துல்லியமான மற்றும் நேரத்திற்குத் தக்க தகவல்களுக்காக அரசு ஊடகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ வழிகளைப் பின்பற்றுமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

நாட்டிற்கு முக்கியமான இந்த காலக்கட்டத்தில் தவறான தகவல்கள் தேவையற்ற பீதி ஏற்படுத்தியுள்ளதால், அதன் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Join US Click Here

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!