Friday, January 23, 2026
HuisBreakingவடக்கு ஆசிரியர்களின் முறையற்ற இடமாற்றங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த ஆசிரியர் சங்கம்..!

வடக்கு ஆசிரியர்களின் முறையற்ற இடமாற்றங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த ஆசிரியர் சங்கம்..!

வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களம் கூறியுள்ளதை அடுத்து, நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீளப் பெறப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்றைய தினம் (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப் பெறுவதாக மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மன்றுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த வழக்கு முடிவுறுத்தப்பட்டது.

வடக்கின் கல்வியில் தொடரும் முறையற்ற செயற்பாடுகளுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்பதுடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!