பாராளுமன்றத்தில் கீரியும் பாம்பும் போல் இருக்கும் அர்சுணாவும் சந்திரசேகரும் யாழில் “கிசு கிசு” நண்பர்களாக உள்ளதுடன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக உள்ள போதும் அர்ச்சுணாவின் சர்ச்சைப் பேச்சுக்களை கட்டுப்படுத்தாது மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் அமைச்சர் மேலும் குழப்புமாறு அர்ச்சுணாவை ஊக்கப் படுத்துகிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் காணி அபகரிப்பு, காணி விடுவிப்பு, உட் கட்டுமானம், வேலை வாய்ப்பு, வடக்கின் கல்வி வீழ்ச்சி, வடக்கின் அரச நிர்வாகத்தில் காணப்படும் ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகங்கள் என பல்வேறு பிரச்சினைகள் இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் அபிவிருத்திக் கூட்டங்களில் எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வாயை மூட வைத்து, திசை திருப்பல்களை மேற்கொண்டு தமது அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்கான கருவியாக பாராளுமன்ற உறுப்பினரை தேசிய மக்கள் சக்தியினர் பயன்படுத்துகின்றனரோ என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகின்றது.


Recent Comments