வெனிசுலாவில் அமெரிக்காவின் டெல்டா படைப்பிரிவு அதிரடியாக களமிறங்கி அந்நாட்ட ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் சிறைப் பிடித்து தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றதைப் போன்றதொரு படை நடவடிக்கையை இலங்கையிலும் இந்திய படையினர் 1987ல் மேற்கொண்டிருந்தனர்.
மிகவும் கனகச்சிதமாக இந்திய சிறப்பு படையால் திட்டமிடப்பட்டு அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அவர்களின் இந்த நடவடிக்கை படுதோல்வியில் முடிவடையும் என்பதை அவர்கள் கனவிலும் உணர்ந்திருக்கவில்லை என்பதுடன் இதில் ஈடுபட்ட பலர் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்திய அமைதி காக்கும் படை (IPKF) யாழில் தரையிறங்கியது. இதன் முதன்மை நோக்கம், ஆயுதக் குழுக்களை ஆயுத ஒழிப்பு செய்து, ஒப்பந்தத்தை அமுல்படுத்தி, வடக்கு – கிழக்கில் அமைதியை நிலை நாட்டுவதாகும்.
ஆரம்பத்தில், தமிழ் மக்களிடையே ஒரளவு எதிர்பார்ப்பு இருந்தாலும், விரைவில் புலிகள் – IPKF மோதல்கள் தீவிரமடைந்தன. யாழ் நகரம் மற்றும் சுற்றுப் புறங்களில் நடந்த இராணுவ நடவடிக்கைகள், கடும் சண்டைகள், ஊரடங்குகள் ஆகியவை தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையை பெரிதும் பாதித்தன. குறிப்பாக 1987 அக்டோபரில் நடந்த யாழ்ப்பாணப் போர் இந்த மோதல்களின் உச்சக் கட்டமாகக் கருதப்படுகிறது.

இந்த நிகழ்வுகள், இந்திய இராணுவத்தின் பங்கு அமைதி காக்கும் பணியிலிருந்து நேரடி போர் நடவடிக்கையாக மாறிய ஒரு முக்கிய கட்டமாக வரலாற்றில் பதிவானது.
1987 அக்டோபரில், இந்திய–இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிந்தைய சூழலில், இந்திய அமைதி காக்கும் படை (IPKF) யாழில் ஹெலிகாப்டர்கள் மூலம் படையினரை இறக்கி பிரம்படி வீதியில் இருந்த புலிகளை அழித்தல், பிரபாகரனை கைது செய்தல் எனும் நோக்கில் முக்கிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இம்முயற்சி படுதோல்வியுடன் நிறைவுக்கு வந்தது.
இந்த நடவடிக்கைகள் குறிப்பாக யாழ் நகரப் பகுதிகள், பலாலி, கோப்பாய், நல்லூர் போன்ற இடங்களை மையமாகக் கொண்டு, வான்வழி தரையிறக்கம் மற்றும் சமாந்தரமாக தரைப் படை முற்றுகை போன்ற நடவடிக்கைகள் நடைபெற்றன.
இந்த தாக்குதல்களில் புலிகள் கடுமையாக எதிர்த்துப் போரிட்டனர். அதே நேரத்தில், கடும் உயிரிழப்புகள், பொது மக்கள் பாதிப்பு, மற்றும் பொருளாதார சேதங்கள் ஏற்பட்டதாகவும் வரலாற்றுகள் கூறுகின்றன.
இதன் மூலம், IPKF-யின் பங்கு “அமைதி காக்கும் படை” என்ற நிலையிலிருந்து “இன அழிப்புப் படை” என்ற நிலைக்கு மாற்றியது.


Recent Comments