நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த தடைவிதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இன்று (31) முதல் தனி ஒருவர், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், அரச நிறுவனங்களுக்குத் தேவையான பாரிய கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சின் செயலாளர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
புதிய சுற்றறிக்கையின்படி, அரச நிறுவனங்களுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைத் தடுக்க நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Recent Comments