நாட்டில் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணங்க டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைய சூழலில் பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வழமையான கட்டணங்களிலேயே பயணங்களை மேற்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


Recent Comments