உயர்தரப் பரீட்சை மண்டபம் ஒன்றில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர் அங்கிருந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஒரு பாடசாலை அதிபர் என்றும், மற்றொருவர் ஹிங்குராக்கொட கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர் என்றும் வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ.சமரகோன் தெரிவித்துள்ளார்.
பரீட்சைத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குறித்த இருவரும் சிக்கியதாக கூறப்படுகிறது.
அதன்படி, பிடிப்பட்ட மேற்பார்வையாளரையும் உதவி ஒருங்கிணைப்பு அதிகாரியையும் பரீட்சை மேற்பார்வை பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்ததாக பணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Recent Comments