O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (15) தெரிவித்தார்.



ஏதேனும் ஒரு காரணத்தினால் பாடசாலை அல்லது தனியார் பரீட்சார்த்திகள் அனுமதிச் அட்டையை பெறவில்லையென்றால், திணைக்களத்தின் இணையத்தளத்தில் அனுமதி அட்டையைப் பதிவிறக்கம் செய்வதற்கு வசதி செய்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.