பாடசாலை மாணவிக்கு ஆபாசமான படங்கள் அனுப்பிய 44 வயதான ஆசிரியர் கைது..!

தம்புத்தேகமவில் உள்ள பாடசாலை ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு வட்ஸ்அப் ஊடாக ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து (30) சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான குறித்த ஆசிரியர் நேற்று (31) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *