ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட யாழ் மற்றும் வவுனியா நபர்கள்..!

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை பாதுகாப்பு அமைச்சு நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.



வவுனியாவைச் சேர்ந்த அந்தோனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகிய இருவரும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.



குறித்த இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததற்காக தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததுடன் வவுனியாவைச் சேர்ந்த அந்தோனி எமில் லக்ஷ்மி காந்தன் இவ்வருடம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழு சார்பில் வவுனியாவில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.