முல்லைத்தீவில் தொடருந்தில் மோதி யானை உயிரிழப்பு..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் யானை ஒன்று புகையிரதத்தில் மோதி பலியாகியுள்ளது. இந்த விபத்து நேற்றையதினம் (21.11.2023) இடம்பெற்றுள்ளது.



கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த உத்திரதேவி புகையிரதத்துடன் மோதியே விபத்துக்குள்ளானது.



விபத்தில் சிக்கிய யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்