54 நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு ஜனவரி முதல் இடமாற்றம்..!

நாடளாவிய ரீதியில் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் கடமையாற்றும் ஐம்பத்து நான்கு மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் 2024 ஆம் ஆண்டில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகள் 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய பணியிடங்களில் பணிபுரியத் தொடங்குவார்கள் என நீதிச் சேவை ஆணைக்குழு வட்டாரங்கள் குறிப்பிட்டன.



26 மாவட்ட நீதிபதிகள் மற்றும் 27 நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.



உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்