புளியங்குளத்தில் 29 வயது யுவதியை தனது கிளினிக்கில் வைத்து துஸ்பிரயோகம் செய்த டொக்டர் கைது..!

தனது தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைபெற வந்த 29 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



கைது செய்யப்பட்ட சந்தேக நபரால் புளியங்குளம் பிரதேசத்தில் நடத்தப்படும் வைத்திய நிலையத்தில் சிகிச்சை பெறச் சென்ற 29 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்