2024 முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும், 2024ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகும் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.



இதையடுத்து, விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 24 ஆரம்பமாகும் என்பதுடன், மே மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பின்னர், விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 3ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக ஜூன் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.



இதையடுத்து, முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டு, 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பின்னர், 3ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் 2 கட்டங்களாக நடத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



இதற்கமைய, 3 ஆம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையும், 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.