ராஜபக்சக்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் – மேர்வின் சில்வா

ராஜபக்சக்கள் அனைவரும் கப்பலில் ஏற்றப்பட்டு மீண்டும் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



மேலும் நாட்டில் மோசடியான முறையில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவிப்பவர்களும் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.



இவர்களோடு அனைத்து ராஜபக்சக்களும் கப்பலில் ஏற்றப்பட்டு நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.