வடகிழக்கு மக்களுக்கு கடவுச்சீட்டு சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்..!

வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ளது.



குறித்த அறிக்கையில்,



பொது மக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் இன்றைய தினம் (03-08-2023) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.